திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமீபத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்று பிரசவம் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மருத்துவ கல்லூரி முதல்வர் ஹரிகரன் அந்தப் பகுதியில் பணியாற்றிய சுமார் நூற்றி ஐம்பது செவிலியர்களை வேறு பிரிவுக்கு பணி மாறுதல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் குற்றச்சாட்டு குறித்து, துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.