tamilnadu

ராட்சத அலை: மகளை மீட்கச் சென்ற தந்தை பலி...

சென்னை:
திருவான்மியூர் கடற் கரையில் அலைசறுக்கு பயிற்சியில் ஈடுபட்டபோது ராட்சத அலையில் சிக்கித் தவித்த மகளை மீட்கச் சென்ற தந்தை உயிரிழந்தார்.சென்னை பெசன்ட் நகர் எல்லை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், பாலாஜி (55). இவர் ஐ.டி கம்பெனியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 11 வயதில் ரேவதி என்ற மகள் உள்ளார். மகள் சிறுவயதிலிருந்தே திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள கடற்கரையில் அலைசறுக்குப் பயிற்சி மேற் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் திங்களன்று (டிச.7) காலை தந்தை பாலாஜியுடன் ரேவதி திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்று அலைசறுக்குப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று எழுந்த ராட்சத அலை ஒன்றில் சிறுமி சிக்கித் தவித்து வந்துள்ளார்.இதைக் கண்ட பாலாஜி கடலுக்குள் சென்று மகளைக் காப்பாற்ற முயன்ற போது, அவர் அலையில் சிக்கி மாயமாகி உள்ளார். பின்னர் சிறுமியை அருகிலிருந்த மீனவர்கள் மீட்டுள்ளனர். அலையில் சிக்கி மாயமான பாலாஜியை மீனவர் கள் தீவிரமாகத் தேடிய நிலையில், அவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.இது குறித்து மீனவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த திருவான்மியூர் காவல் துறையினர் பாலாஜியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய் விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;