tamilnadu

img

கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை, மே 17- கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதனன்று (மே 17) நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் காவல் துறை மற்றும் மது விலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர்  அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர், மாநில  அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா  தொலைபேசி எண் 10581 பயன் பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல்  கண்காணிப்பாளர் மற்றும் துணைக்  காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு  அமலாக்கத்துறை ஆகியோரின் வாட்ஸப் எண்களை அறிவித்து, அதன் மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல்  காவல் துறை இயக்குநர் (மது விலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர் பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை உள்துறைச் செயலாளரின் மூலம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு சம்பந்த மாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில்,  மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட் கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப் புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த்  துறை அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகி யோரைக் கொண்டு நடத்த வேண்டும். இதுகுறித்து தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றார். பொதுமக்களிடையே கள்ளச்சாரா யம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனை பள்ளிகள், கல்லூரி கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங் கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக்  கொண்டு நடத்த வேண்டும். தொழிற் சாலைகளில், எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண் காணித்து, அது விஷச் சாராயம்  காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படா மல் இருப்பதை, காவல் துறை மற்றும்  உதவி ஆணையர் (கலால்) கண் காணிக்க வேண்டும். மாநிலத்தின் எல்லை பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நிய மிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச் சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை  உள்துறைச் செயலாளர் கண்காணிக்க  வேண்டும் என்றும் தெரிவித்தார். கள்ளச்சாராயம், போதைப் பொருள்களை தொடர்ந்து விற்பனை  செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறை யின் செயல்பாடுகளைக் கண் காணித்து, முதலமைச்சர் அலுவல கத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டார். இதில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல் துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, காவல் துறை  கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு)  கி.சங்கர், மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை ஆணையர் மா.மதிவாணன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண் இயக் குநர் லெ.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.