சென்னை, ஜூலை 6- சிறு வணிகர்களுக்கு அடமானமில்லாக் கடன் வழங்கப்படும் என்று பெங்களூரூவைச் சேர்ந்த “கினாரா கேப்பிடல்” நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரிதிருநாவுக்கரசு, எளிய வழிமுறைகள் மூலம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விரைவாகக் கடன் வழங்கப்படும் என்றார். நிறுவனத்தின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பான சுமார் 700 கோடி ரூபாயில், 34 சதவீத அளவு தமிழகத்தில் பல்வேறு தரப்பினருக்கு கடன்களாக வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 13 ஆயிரம் சிறு வணிகர் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு இந்நிறுவனம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மை யானவர்கள் முதன்முறையாக சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முறையான வழியில் கடன் பெறுபவர்கள் அல்லது முதல் தலைமுறை தொழில் முனைவோர் என்றும் அவர் கூறினார். 2 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தொகையாக வழங்குகிறது. இந்தக் கடனை எந்தவிதமான சொத்துகளையும் அடமானமாகக் கேட்காமல், 5 முதல் 7 நாட்களுக்குள் வழங்கி வருகிறது என்றார் அவர்.