சென்னை, ஜூன் 6 -மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளி யாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண்ணும் உயர்ந்துள்ளது.நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யானது தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவபடிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்தகட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள் ளது. ஓ.பி.சி. பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர்.