tamilnadu

img

பொங்கல் பண்டிகை: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

பொங்கல் விடுமுறை காரணமாக விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை-மதுரை விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது; சென்னையிலிருந்து மற்ற இடங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. 
சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.