பொங்கல் விடுமுறை காரணமாக விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை-மதுரை விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது; சென்னையிலிருந்து மற்ற இடங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.