tamilnadu

img

மீன் விற்பனையாளர் சங்கம் புதுச்சேரியில் துவக்கம்

மீன் விற்பனையாளர் சங்கம்  புதுச்சேரியில் துவக்கம்

புதுச்சேரி, ஜூன் 28- சிஐடியு மீன் விற்பனை தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் புதுச்சேரி லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலை யில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஈசிஆர் சாலையில் உள்ள மீன் அங்காடியில் மீன் விற்பனை செய்யும் குருசுக்குப்பம், வைத்திகுப்பம், வம்பா கீரப்பாளையம் ஆகிய மீனவ கிராம ங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதில், சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலைவரும், மீன்பிடி சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரபுராஜ், சிஐடியு மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், உடல் உழைப்போர் சங்கத்தின் நிர்வாகி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பேசினர். புதிதாக துவக்கப்படும் சங்கத்திற்கு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மீன் மற்றும் இறால் விற்பனை தொழிலாளர் சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த சங்கத்தின் தலைவராக என்.பிரபுராஜ், ஆலோசகராக பி.ராமசாமி, கவுரவத் தலைவராக ஜே.மல்லிகா, செயல் தலை வராக ராஜ்குமார், செயலாளராக ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மீன் மற்றும் இறால் விற்பனை தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய பெயர் பலகையை ஜூலை 11ஆம் தேதி ஈசிஆர் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் கொடியேற்றத்துடன் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.