tamilnadu

img

ஏரி நீர் வெளியேற்றத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

செஞ்சி, ஜூன் 11- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத் திற்குட்பட்டது பாலப்பட்டு கிராமம். இங்குள்ள ஏரியில் குடி மாராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிய மதகு, ஏரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால்  ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீர் வீணாக வெளியே திறந்து விடப்படுகிறது.  இதனைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் விழுப்புரம், செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஏரிகரையை ஜெசிபி இயந்திரத்தின் மூலம் உடைத்து தண்ணீரை வெளியேற்றி வரு கின்றனர். தற்போது கோடைக் காலம் என்ப தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பாசன வசதி பெறும் நெல்  பயிர்கள் காய்ந்து போகும் சூழலும் உள்ளது.  எனவே குடி மராமத்து பணிக்காக ஏரி நீரை  வெளியேற்றக் கூடாது என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  வட்டாட்சியர் கோவிந்தராஜ், கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜீவராஜ் மணி கண்டன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏரி  நீரை வெளியேற்ற மாட்டோம் என உறுதி யளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.