கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் மோசடி கலசப்பாக்கம் விவசாயிகள் ஆவேசம்
ருவண்ணாமலை, ஜூன் 3- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளைத் திருப்பித் தராமல் மோசடி செய்த செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யா மல் இருப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை பரா மரிப்பு கடன் கொடுக்காமல் அலைக் கழிப்பதைக் கண்டித்தும் அனைத்து விவ சாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை கூட்டுறவு இணைப்பதி வாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவ சாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைப்பதி வாளர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.