tamilnadu

img

தீயணைப்புத் துறைக்கு அதி உயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள் வாங்க ஏற்பாடு

சென்னை,டிச.15- தீயணைப்புத் துறையில் வான்நோக்கி உயரும் ஏணி  கொண்ட தீயணைப்பு வாகனங் கள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளது. ‘ஸ்கைலிப்ட்’என்று அழைக்கப்படும் இந்த வகை தீயணைப்பு வண்டிகள் கூடுதலாக  வாங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து வந்தது.

இதையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின்  பயன்பாட்டிற்காக  ரூ.63.30 கோடி  மதிப்பில் நவீன தீயணைப்பு வாகனங்கள் இப்போது வாங்கப் பட்டுள்ளது. அதில் வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்தி கள், 7 அதி உயர் அழுத்த நீர் தாங்கி வண்டிகள், 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி வண்டிகள் இப்போது தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன.

இந்த புதிய வாகனங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடிய சைத்து தீயணைப்புத்துறை பயன்பாட்டுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் பயன்பாட்டுக்கு 16 ஜீப்கள், பேரிடர் காலங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள்  ஆகியவற்றையும் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.