tamilnadu

img

தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிடுவதே முதல் பணி!டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் பேட்டி

சென்னை, ஆக. 23 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தின் 27-ஆவது தலைவ ராக மூத்த இந்திய ஆட்சிப்பணி அதி காரி எஸ்.கே. பிரபாகர், வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 2022 இல் டிஎன்பி எஸ்சி தலைவராக இருந்த பாலச் சந்திரன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது எஸ்.கே.பிரபாகர் புதிய தலைவராக பதவியேற்றார். 2028 ஆம் ஆண்டு வரை எஸ்.கே.பிரபா கர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிமுனையில் உள்ள அலுவலகத்தில் முறை யாக பதவியேற்ற பின், பின்னர் எஸ்.கே. பிரபாகர் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு, அரசுப் பணியாளர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். அவ்வாறிக்கையில், இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்துவதற்கு தலைவர் என்ற முறையில் நான் உறுதியளிக்கி றேன்” என்றார்.

“தேர்வு முடிவுகளை உடனடி யாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டித் தேர்வுகளையும் மாண வர்கள் எழுதுவதால், இரு தேர்வு கள் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர் களின் கனவுகள் நிறைவேற அனை த்து பணிகளையும் மேற்கொள் வோம்” என்றும் கூறினார்.

மேலும், “நடப்பு சிக்கல்களை உணர்ந்து, மற்ற தேர்வுகளை எப்படி நடத்துகின்றனர் என்பதை யும் கவனித்து, அவற்றையும் பின்பற்ற முயற்சி எடுத்து வரு கிறோம். தேர்வுக்கு, தேர்வு முடிவு களுக்கு இருக்கும் இடைவெளி யை குறைக்க நிச்சயம் நட வடிக்கை எடுப்போம். கால தாம தத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி” எனவும் அவர் தெரிவித்தார்.