சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 22 அன்று தொடங்கி செப்டம்பர் 3 வரை நடைபெறுகிறது.
முதலில் சிறப்பு பிரிவினருக் கான கவுன்சிலிங் நடைபெறு கிறது. பொது கலந்தாய்வு 29-ஆம் தேதி தொடங்குகிறது.
2 லட்சம் மாணவர்கள் பொறி யியல் படிப்பில் சேர விண்ணப் பித்துள்ள நிலையில், அவர் களுக்கான தரவரிசை பட்டி யல் ஜூலை 10 அன்று வெளி யிடப்பட்டது. இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவா கும். அதேபோல் 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். இதுவே கடந்த ஆண்டு 2,911 பேர்களாக இந்த எண்ணிக்கை இருந்தது.
இவ்வாறு டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யும் குறைந்திருக்கும் நிலை யில், பொறியியல் கல்லூரி களில் இடங்கள் அதிகரித்து இருப் பதால் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.
மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வு தேதி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அத னால் பொறியியல் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்ப தற்காக கலந்தாய்வு அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது.
2 லட்சம் மாணவர்கள் இதற் காக காத்திருக்கக் கூடிய நிலை யை தவிர்க்கும் வகையில் கலந் தாய்வு தேதி அறிவிக்கப்பட்டி ருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரி வித்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் முத லிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் 12-ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்திருந்தார்.