மின் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை 6 மாதங்களாக வழங்காததை கண்டித்து வியாழனன்று (மார்ச் 12) தமிழகம் முழுவதும மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) 1, 2 அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், நிர்வாகிகள் முருகானந்தம், அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.