tamilnadu

img

எர்த்மூவர் வாகனம் ஏறி சேதமடைந்த பாதத்திற்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை

சென்னை, ஜூலை 20- சென்னையை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப ஊழியரான 29 வயதாகும்  தாசரதி இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்து கொண்டிருந்த ஒரு எர்த்மூவர் வாக னம் அவர் மீது மோதியது.   பைக்கிலிருந்து கீழே விழுந்தபோது, அவரது வலது பாதத்தின் ஒரு பகுதி மீது  அந்த வாகனம் ஏறி, இறங்கியது.  ஒரு  ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற இவ்விபத்தால்  அவரது பாதம் அதிக சேதத்திற்கு ஆளா னது. உடனே அவர் பெரும் பாக்கத்தில் உள்ள  கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின்  அவசரநிலை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். பாதத்தின் மைய மற்றும் முன்புற பகுதியிலும் மற்றும் காலின் கீழ் பகுதி யிலும் ஏறக்குறைய பெரிய காயம் அவ ருக்கு ஏற்பட்டிருந்தது. பாதத்தின் எலும்பு கள் நிலைப்புதன்மையற்றதாக இருந்த தோடு, வெளியில் தெரிந்தன.  காலில் வாகனம்  ஏறி இறங்கியதனால் கால் விரல்களுக்கான ரத்த நாளங்கள் சேதமடைந்திருந்தன  டாக்டர் செல்வ சீதாராமன்,   தலைமை யில்  மருத்துவர்கள் கேசவன், சிவக்குமார் மற்றும் சிவா ரெட்டி ஆகியோர் அடங்கிய  குழு பாத மறுசீரமைப்பு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. மாசுபட்ட துகள்கள் மற்றும் பயன்படுத்த இயலாத திசுக்களை அகற்றி ரத்தநாளங்களின் நுண்ணிய மறுசீரமைப்பின் வழியாக கால்  விரல்களுக்கு ரத்த ஓட்டம் ஏற்படுத்தப் பட்டது.  காயத்தை சுத்தம் செய்வதற்கு உடனடி யாக மேற்கொள்ளப்பட்ட நடைமுறையும் தொடையின் ஒருபகுதியில் இருந்து எடுக்கப்  பட்ட திசுவை பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்  சையும் தான் நோயாளி பாதம் சீராக காரணம்  என்று டாக்டர் செல்வ சீதாராமன் கூறினார்.