பட்டியலினத்திற்குள் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு 6:1 என்ற பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், உள் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை முன்னின்று நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தங்களின் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், திராவிடர் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, மாநில அமைப்புச் செயலாளர் விடுதலை வீரன், தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன், ஆதித் தமிழன், தங்கவேல், செந்தில், சசி, சூர்யா ஆகியோர் கே. பாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் உடனிருந்தார்.