tamilnadu

img

விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்: மத்திய அரசுக்கு சிபிஐ வேண்டுகோள்.....

சென்னை:
விவசாயிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை துரோகம் செய்யாதீர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப் பட்ட விவசாயிகள் விரோத, வேளாண் பெருவணிக சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும், எதிர்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு “தாரைவார்க்கும்“ அந்தச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.இதன் மீது கவனம் செலுத்தி, விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, ஜனநாயகப்பூர்வ தீர்வு காணத் தவறியபாஜக மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகத்து, அத்துமீறி அவசர சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றதாக அறிவித்து விட்டது.நாடு முழுவதும் உள்ள சுமார் 20 கோடி விவசாயிகளும் வாழ்வுரிமை பறிபோகும் பேராபத்தை உணர்ந்து, விவசாய விரோதச் சட்டங்களையும், மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2020 ஐம் திருப்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அறிவித்தனர்.

பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும், தி.முகழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்து குரல் கொடுத்து வருகின்றன.இந்த நிலையில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ‘தில்லி சலோ’ அழைப்பை ஏற்று நவம்பர் 26, 27, 28 தேதிகளில் விவசாயிகள் தலைநகர் தில்லி நோக்கி அணிவகுத்து வந்தனர்.பாஜக மத்திய அரசு விவசாயிகளை தில்லி நகருக்குள் அனுமதிக்காமல், தடுத்து நிறுத்த சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டது. சாலைகளில் தடுப்பு அரண் அமைத்தது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. பீரங்கி வண்டிகளை வைத்து, கடுங்குளிரில் நின்ற விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சியடித் தது, தடியடி நடத்தியது, நெடுஞ் சாலைக் நீள, அகலப் பள்ளங் களை தோண்டி  துண்டித்தது என உணவளிக்கும் உழவர்கள் மீது பாஜக மத்திய அரசு யுத்தத் தாக்குதல் நடத்தியது. இவைகள் அனைத்தையும் தாண்டி, தலை நகர் தில்லியில் திரண்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கின்றோம்.விவசாயிகளின் மாபெரும் எழுச்சியின் நிர்பந்தத்தால் டிசம்பர் 3ஆம் தேதி பாஜக மத்திய அரசு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.இதற்கிடையில் உள்துறை அமைச்சர் டிசம்பர் 3ஆம் தேதிக்கு முன்பாகவே பேசத் தயார் என அறிவித்துள்ளார்.பாஜக மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அமைய வேண்டும் என்ற விவசாயிகள் உணர்வை பிரதிபலிக்க வேண் டும். இதற்கு மாறாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத் தடித்து ஏமாற்றும் வஞ்சகம் எண்ணம் இருந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறது.உழவர்கள் ஒன்றுபட்டு நடத்திவரும் போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் உள் ளிட்ட அனைத்துப் பகுதியினரும் பேராதரவு வழங்க வேண்டும்.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.