tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை திமுக போராட்டம்....

சென்னை:
தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக சார்பில் வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழன்று (டிச.3) காலையில் 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார், அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது.இக்கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் வரும் 5-ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்கு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரி
விக்கப்பட்டுள்ளது.

;