tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெஞ்சால் நிவாரணம்  ரூ.1.30 கோடி நிதி வழங்கிய திமுக எம்எல்ஏக்கள் 

சென்னை,டிச.13- பெஞ்சல் புயல்-கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதி யத்தை பெஞ்சால் புயல் நிவாரணமா முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலை வர், அரசு தலைமைக் கொறடா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரை வோலைகள் மற்றும் காசோலைகளை முதலமைச்சரிடம் டிசம்பர் 13 அன்று அமைச்சர் துரை முருகன் வழங்கினார். இந்நிகழ்வின் போது, அரசு  தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார்.

கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் 

சென்னை,டிச.13- புதுதில்லியில் நடை பெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணை யத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஐந்து விருது களை டிசம்பர் 13 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க,ஸ்டா லினிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் காண்பித்து வாழ்த்துப் பொற்றார். இந்நிகழ்வின் போது, கூட்டு றவு, உணவு- நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் உடனி ருந்தனர்.