tamilnadu

அமித்ஷாவுக்கு திமுக செயற்குழு கண்டனம்

சென்னை : திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைமச் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.22) நடைபெற்றது. பெஞ்சால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெள்ள நிவாரணமாக ரூ.2  ஆயிரம் கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும், மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அதிமுகவும், டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட பாஜக அரசும் போடும் கபட நாடகத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.