tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் தீக்கதிருக்கு 2,240 சந்தாக்கள் அளிப்பு

திருச்சி மாநகர் - புறநகர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கரூரை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில்  தீக்கதிர் நாளிதழுக்கு 948 ஆண்டுச் சந்தா, 1,292 அரையாண்டு சந்தா என மொத்தம் 2,240 சந்தாக்கள் வழங்கப்பட்டன. தஞ்சாவூரில் நடைபெற்ற இதற்கான விழாவில் சந்தா தொகை ரூபாய் 32 லட்சத்து 52 ஆயிரத்து 600-ஐ சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட்டச் செயலாளர்கள் சின்னை. பாண்டியன், வி. மாரிமுத்து, ஆர். ராஜா,  பி. சீனிவாசன், பி. ரமேஷ்,  எம். இளங்கோவன் ஆகியோர் வழங்கினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பி.நாகை மாலி எம்எல்ஏ, ஐ.வி. நாகராஜன், சாமி.நடராஜன்,  தீக்கதிர் திருச்சிப் பதிப்பு பொதுமேலாளர்ஜெ. ஜெயபால், மாவட்டப் பொறுப்பாளர்கள் டி. முருகையன், கோவி. வெற்றிச்செல்வன், ந. குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.