சென்னை, மே 25-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக் குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தனர்.இதையடுத்து பேரவைத்தலைவர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு எதிராக 2 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்று பேரவைத் தலைவர் உத்தரவுக்கு தடை பெற்றனர். இந்நிலையில் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். எனவே, பேரவைத்தலைவர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார் கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பேரவைத் தலைவர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.மேலும் பேரவையில் திமுக பலம் அதிகரித்துள் ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சமாளிக்க இந்த 3 பேரின் ஆதரவும் அதிமுக அரசுக்கு தேவைப்படுகிறது. எனவே தற்போதைக்கு இவர்கள் மீதான நடவடிக் கையை பேரவைத்தலைவர் ஒத்திவைப்பார் என்று கூறப்படுகிறது.