tamilnadu

img

பொங்கல் விழாவில் பறையடித்து ஆடிய டிஜிபி சைலேந்திரபாபு

ஆவடி,ஜன.14- சென்னை ஆவடியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி படை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டார். அதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணியின் காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஜெயராம், மற்றும் ஆயுதப்படை காவல்துறை தலைவர் ராதிகா உள்ளிட் டோர் பங்கேற்றனர். நுழைவாயிலில் கரும்பு, வாழை, தோர ணங்களுடன் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மேளம் நாதஸ்வரம், பேண்ட் வாத்தியம் என பொங்கல் திருவிழா களை  கட்டியது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு, புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பறை இசை கலை ஞர்கள் வாத்தியத்தை இசைத்தபடி நடன மாடினார்கள். அதை பார்த்தும் டி.ஜி.பி.சைலேந்திர பாபு பறையை வாங்கி அடித்தபடி கலைஞர்களுடன் ஆடினார்.