tamilnadu

img

அதானியை கைது செய்யக்கோரி மயிலையில் ஆர்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்க லஞ்சம் ஊழலில் ஈடுபட்டுள்ள  அதானியை கைது செய்ய வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு மற்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (நவ.27) மயிலாப்பூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தென்சென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.