tamilnadu

img

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பு: பொதுப்பணித்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: கே.பாலகிருஷ்ணன்

மயிலாப்பூர் தொகுதி கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடித்த பொதுப்பணித்துறையின் நடவடிக்கைக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.

கோவிந்தசாமி நகரில் வீடுகளை இழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகளை இடித்து அனாதைகள் போல ஆக்கியுள்ள பொதுப்பணித் துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபர்களின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை சிபிஎம் எதிர்கொள்ளும்.

முதலமைச்சர் 10 லட்ச ரூபாய் அறிவித்தது போதுமானதல்ல, ரூ 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு மக்களை வெளியேற்ற முடியும் என்றால் இங்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நீதிமன்ற உத்தரவின் பேரின் இடிப்பு பணிகள் நடக்கிறது என்றால் தமிழக அரசு ஏன் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு போக கூடாது என கேள்வி எழுப்பினார்.

இச்செய்தியாளர்கள் சந்திப்பின்போது தென்சென்னை மாவட்ட ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.