சென்னை, ஜூன் 8- கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்றுள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க முடியாது என்று தமிழக அரசு கூறி விட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். விசா ரணையில், அவர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் சங்ககிரி யைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவ ராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் விசாரணையின் போதே இறந்து விட்டனர்.
இந்த வழக்கில் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் யுவராஜின் கல்வித்தகுதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி யுவ ராஜின் மனைவி சுவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சனிக்கிழமையன்று இந்த மனு வின் மீது நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இதில் அரசு தரப்பில் கூடுதல் குற்ற வியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜ ராகி பதில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்பட் டது. இதில், அவர் செய்துள்ள குற் றங்களைக் கருத்தில் கொண்டு அவ ருக்கு முதல் வகுப்பு ஒதுக்குவது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அத் துடன், கொலைக் குற்றங்களில் ஈடு பட்டவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்க சிறை விதிகளில் அனுமதி யில்லை. எனவே, யுவராஜ் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்குமாறு உரிமை கோர முடியாது. ஆகை யால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனுவின் மீதான விசாரணையை வருகிற ஜூன் 20-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.