tamilnadu

img

திருபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு 4.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

சென்னை, ஜூன் 5 - திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான டி.ஆர்.பாலு, 4.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திருபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதி களை உள்ளடக்கியது. இந்த தொகுதி யில் டி.ஆர்.பாலு (திமுக), ஜி.பிரேம் குமார் (அதிமுக), வி.என்.வேணு கோபால் (தமாகா (மூ)),  வி.ரவிச்சந்திரன் (நாதக) உள்ளிட்டு 31 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியில் உள்ள 23 லட்சத்து 82  ஆயிரத்து 119 வாக்காளர்களில், 14  லட்சத்து 35 ஆயிரத்து 243 பேர் வாக் களித்தனர். இது மொத்த வாக்காளர் களில் 60.25 விழுக்காடு ஆகும். இந்த வாக்குகள் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாகத்தில் 32 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

அஞ்சல் வாக்கு

6001 அஞ்சல் வாக்குகளில் டி.ஆர்.பாலு 2,940, ஜி.பிரேம்குமார், 1033, வேணுகோபால் 927, ரவிச்சந்திரன் 302 என வாக்குகளை பெற்றனர். 447  ஒட்டுகள் செல்லாதவையாக அறிவிக் கப்பட்டன.

அஞ்சல் வாக்குகளுடன், வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளில், 7 லட்சத்து 58 ஆயிரத்து  611 வாக்குகள் பெற்று டி.ஆர்.பாலு  வெற்றி பெற்றார்.

அதாவது, அதிமுக வேட்பாளரை விட 4 லட்சத்து 87  ஆயிரத்து 29 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை டி.ஆர்.பாலுவிடம் தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ச.அருண்ராஜ் வழங்கினர். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தா.மோ.அன்பர சன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்கு விவரம்

டி.ஆர்.பாலு (திமுக) 7,58,611
ஜி.பிரேம்குமார் (அதிமுக) 2,71,582
வி.என்.வேணுகோபால் (தமாகா(மூ) 2,10,110
வி.ரவிச்சந்திரன் (நாதக) 1,40,233
நோட்டா 26,450
வாக்கு வித்தியாசம் 4,87,029