tamilnadu

img

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சிபிஎம் கண்டனம்....

சென்னை:
ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வியாழனன்று மாநில செயற்குழு உறுப்பினர்என். குணசேகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலச்செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு பிற்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று அமலாக்க முடிவு செய்தது. பின்னர் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 93வது திருத்தம் செய்யப்பட்டது. 

இந்த திருத்தமும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்கும் தனிச்சட்டமும் செல்லுபடி யாகும் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சட்ட அமர்வு தீர்ப்பு கூறியது. அதனைத்தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுவழங்கப்பட்டு வருகிறது. முன்னதாகவே அரசியல் சட்ட அடிப்படையில் தலித் மற்றும்பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசினால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு, தொழில் நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறை அவசியமில்லை எனவும், ஆசிரியர் பணியிடங்களிலும் இட ஒதுக்கீடு கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளது. இது சமூக நீதியைக்குழி தோண்டிப் புதைத்து, உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைத்து வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பறிக்கும் முயற்சியாகும். இந்திய நாட்டில் சமூக நீதி அடிப்படையில் விளிம்பு நிலை மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்தபட்ச வாய்ப்பைக் கூட பறிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அப்பரிந்துரையை நிராகரித்து, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த வேண்டுமென்று மத்திய அரசை  வலியுறுத்துகிறது.

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறுக!
கோவிட் -19 தொற்று மிகக் கொடூரமாக பாதித்து வந்துள்ள இக்கால கட்டத்தில், பெருவாரியான மக்கள் தங்களின் வாங்கும் சக்தியை, வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மோசமான நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களில் சமையல் எரிவாயுவின் (கேஸ்) விலை ரூ. 100 உயர்த்தியிருப்பது அடுப்பை பற்ற வைக்காமலே எரிகிற சூழல் (கோபம்) உருவாகியுள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்தியிருப்பதும், வங்கி மூலம் வழங்கப்படும் மானியத் தொகை முழுமையாக வழங்கப்படாததும், அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தரவகுப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ள மனஉளைச்சலை அதிகாரவர்க்கம் உணர்ந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.கடந்த நவம்பர் 20ந் தேதி முதல் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குஇணையாகவும், 2018  செப்டம்பரில்சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 78.89  டாலராக இருந்தது.  தற்போது கச்சா   எண்ணெய் விலை  பேரலுக்கு 50 டாலருக்கும் கீழே உள்ள நிலையில் விலை  உயர்வை எப்படி நியாயப்படுத்தமுடியும்.  

தொடர்ச்சி 3ம் பக்கம்...

;