tamilnadu

img

நக்கீரன் செய்தியாளர் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் பத்திரிகையாளர், கேமரா மேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது சமூக விரோத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது.  இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தாக்குதல் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுகுறித்து தீர விசாரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளங்கண்டு பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, வழக்கு தொடுத்திட வேண்டுமெனவும், தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டுமெனவும், ஊடகத்துறையினர் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;