சிதம்பரத்தில் சிபிஎம் பிரச்சார நடைப்பயணம்
சிதம்பரம், ஜூன் 15- மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் தமிழக அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலி யுறுத்தியும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைப்பயணம் சிதம்பரம் நகரத்தில் உள்ள கனகசபை நகரில் சிபிஎம் சார்பில் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பை யன் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசினார். நடைபயணம் கனகசபை நகர், ஞானப்பிரகாசம் தெரு, தெற்குவாணியர் தெரு, செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெரு, நேரு நகர் ஆகிய தெருக்களின் வழியாக சென்று காந்தி சிலையில்நிறைவு பெற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், மாரி யப்பன், ஓய்வூதிய சங்கத்தின் நிர்வாகிகள் ராகவேந்திரன், கலியமூர்த்தி உள்ளிட்ட சுமார் நூறுபேர் வணிகர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கினர். கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரத்தை வழங்கினர்.