tamilnadu

கார் பந்தயம் நடத்த நீதிமன்றம் அனுமதி!

சென்னை,ஆக.29- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும்  தனியார் அமைப்பு இணைந்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை யில் ஆக. 30 முதல் செப்டம்பர் 1 வரை இந்தியாவின் முதல் ஃபார்முலா 4  பந்தயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டிக்கான மின் விளக்கு கள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமை க்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர் பாளர் பிரசாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். இந்த வழக்கு ஆக.29 அன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கார் பந்தயம் நடத்த தடை விதிக்க முடியாது என்றும் பொது மக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை  நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியார் பாலம், சுவாமி  சிவானந்தா சாலை மற்றும் அண்ணா  சாலையை சுற்றி 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடத்தப் படுகிறது. இது தெற்காசியாவி லேயே மிக நீளமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள் ளது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்வதால் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள் . இந்நிலையில், தற்போது டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

இந்த கார் பந்தயத்தை சாலை யின் இரண்டு பக்கங்களிலும் பொது மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வரு கிறது. பந்தயத்தை பார்க்கும் பொது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த வித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டி ருக்கிறது.

உலகமே இன்று திரும்பி பார்க்கும் வகையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் வெற்றிகரமாக சென்னை சாலைகளை சீறிப்பாய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.