சென்னை, ஆக. 30- சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியியில் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மாந கராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 653 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள தாகவும், 2 ஆயிரத்து 712 பேர் உயிரி ழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 1,621 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,577 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 1,327 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூரில் 1,087 பேரும், வள சரவாக்கத்தில் 1,051 பேரும், திரு.வி.க நக ரில் 1,032 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். தேனாம்பேட்டையில் 995, தண்டை யார்பேட்டையில் 961, ராயபுரத்தில் 907, ஆலந்தூரில் 763, பெருங்குடியில் 591, சோழிங்கநல்லூரில் 576, மாதவரத்தில் 547, திருவெற்றியூரில் 276, மணலியில் 157 என தொற்றிலிருந்து மீண்டுவர சிகிச்சை பெற்று வருகின்றனர்.