அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கை
அம்பத்தூர், ஜூன் 28- அமைப்புசாரா பொது தொழிலாளர் சங்கம் அம்பத்தூர் பகுதி 2ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் எஸ்.வேலு தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.மணிமேகலை மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜெ.ரவி வேலை அறிக்கையையும், பொருளாளர் வி.தேவி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சு.பால்சாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் எஸ்.மைதிலி வரவேற்றார். எம்.ஜான்சிராணி நன்றி கூறினார். தீர்மானங்கள் நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும், இ பஸ்களை தனியாரிடம் வழங்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக எஸ்.வேலு, செயலாளராக ஜெ.ரவி, பொருளாளராக பி.மணி உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுராந்தகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் பயன்படுத்தி வரும் நிலத்தடி நீருக்கும் வரி வசூலிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை கண்டித்தும், உடன் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் வட்டத் தலைவர் எம் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது மாவட்டத் தலைவர் வி அரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன் நிர்வாகிகள் எஸ் அர்ஜுன் குமார், ராஜேந்திரன், ரவி, முருகேசன்உள்ளிட்ட பலர் கோரிக்கையில் விலக்கி பேசினார்.