tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இடஒதுக்கீட்டைஒழிக்க சதி: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை, ஜன.28- உயர்கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடி யாக ஒழிப்பதற்கு சதி நடைபெறு வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் “உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரி வினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அந்தப் பணிகளை பின்ன டைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். அதற்கு மாறாக, தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக் கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகிவிடும். இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர் கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக் கழக மானியக்குழு கருத்துகளைக் கேட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கோவை, குமரிக்கு  சிறப்பு ரயில்கள்

சென்னை, ஜன, 28- பயணிகள் வசதிக்காக, சென்னை- கன்னியாகுமரி, சென்னை - கோயம் புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூரிலிருந்து ஜன. 29-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06042) புறப்பட்டு, மறுநாள் அதி காலை 2.45 மணிக்கு கன்னியா குமரியை அடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.29-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, அதே நாள் இரவு 11.05 மணிக்கு கோயம் புத்தூரை சென்றடையும்.

இந்த ரயிலு க்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.