சிபிஎம் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி திண்டுக்கலில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, பாஜக குண்டர்களை கண்டித்து சிபிஎம் மாநகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் பேருந்தி நிலையம் அருகே நகரச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் கே.நேரு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சீனிவாசன், நகரக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், ஜி.லட்சுமிபதி, எம்.சூரிய பாரதி, என்.நந்தகோபால் (தவிச), படவேட்டான்(மின்னரங்கம்), வேணுகோபால்(கோவில்மனை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.