tamilnadu

img

பெருந்தமனி அழற்சிக்கு சிக்கலான அறுவைசிகிச்சை

சென்னை, ஜூன் 27- இதயத்திலிருந்து வெளிவரும் முக்கியமான ரத்தநாளம் தொடக்கத்திலி ருந்து இறுதி வரை கிழிந்தி ருந்தால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கா விடில் 24 மணிநேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உயிரி ழப்பதற்கான சாத்தியம் 1 முதல் 2 சதவிகிதமாக அதிகரிக்கும். இந்நிலைக்கு வெற்றிகர மாக சிகிச்சையளிக்க உறைந்த யானை தும்பிக்கை அறுவை சிகிச்சை என்ற செயல் முறை உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நமது நாட்டிற்கு ஏற்ப  இந்த சிகிச்சை முறையை மாற்றியமைத்து  25 நோயாளிகளுக்கு  வெற்றிக ரமாக  சிகிச்சை அளிக்க ப்பட்டுள்ளது. இதனை   இந்த துறையின் தலைவரும் பிரபல இதய சிகிச்சை நிபுணருமான  டாக்டர்.ஏ.ஏ. பாஷி வேலாயுதம் தெரி வித்துள்ளார். பழைய முறையில் இரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படவேண்டும். ஆனால்  புதிய அறுவை சிகிச்சை முறையில் ஒரே ஒரு முறை அனுமதிக்கப்பட்டு ஒரே அமர்வில்  பாதிப்புக்குள்ளான ரத்த நாளங்கள் நீக்கப்பட்டு புதிய  ரத்த நாளங்கள் பொருத்த படுகின்றன.  இதனால்  பல சிக்கல்கள் குறைகின்றன. இந்தியாவில் இத்தகைய சிகிச்சை முறையை வேறு எந்த மருத்துவ மனையும் செய்ததில்லை என்று  சிம்ஸ் துணைத்தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி கூறினார். முன்னதாக இந்த சிகிச்சை முறையில் குண மடைந்த  சகோதரி கிளாடி யஸ் உள்ளிட்ட  நோயாளி கள் டாக்டர் பாஷிக்கு பொன்னாடை அணி வித்து நன்றி தெரி வித்துக்கொண்டனர்.