டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
திரைக்கலைஞர் பார்த்திபன் பங்கேற்பு
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் திங்களன்று (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பழைய மகா பலிபுரம் சாலை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். அப்போது அந்த வழி யாக சென்ற திரைக்கலைஞர் ஆர்.பார்த்தி பன் நிகழ்வில் கலந்து கொண்டு, அம்பேத்க ருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களோடு அன்பு பாராட்டி அனை வருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், “சாலை யில் வரும் வழியெங்கும் ஆங்காங்கே அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்து சிறுசிறு மக்கள் கூட்டம் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை பார்த்தேன். இந்தியாவின் உயிர் மூச்சு இயங்குவதற்கு காரணமே, அவரை நினைவில் வைத்து போற்றும் உங்களை போன்ற மக்களால்தான். அவர் மத்திய பிரதேசத்தில் பிறந்த தாக சொல்வார்கள். எல்லோருமே உட லின் மத்திய பிரதேசத்தில்தான் பிறப்பார் கள். அவர் இதயத்தின் மத்திய பிர தேசத்தில் இருந்து பிறந்துள்ளார். அந்த ஈரத்தோடு, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது பணியை தொடர்ந்து செய்ய போராடுவோம்” என்று கூறி ஜெய்பீம் என முழக்கமிட்டார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.