வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு
சென்னை, ஆக.1- பெட்ரோல் - டீசல் விலையை போன்று, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண் ணெய் நிறுவனங்க ளே நிர்ணயித்து கொ ள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வ தேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை, ஆகஸ்ட் 1 முதல் ரூ. 7.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 1,817 ஆக உயர்ந்துள்ளது. 4 மாத மாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது
சென்னை, ஆக. 1 - தமிழ்நாட்டிற்கும், தமிழி னத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி யவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ விருதை, தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
முதல் விருது விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவருமான தோழர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவின் இல்லத்திற்கே சென்று விருதை வழங்கினார்.
அந்த வகையில், இந்த ஆண்டுக் கான ‘தகைசால் தமிழர்’ விருதை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியு மான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதை வழங்க உள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு: அசல் மதிப்பெண் சான்று விநியோகம்!
சென்னை, ஆக.1- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டி யல் வியாழக்கிழமை (ஆக.1) முதல் வழங்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள் ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர் கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், மதிப்பெண் பட்டி யலையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள் ளது. மேலும், விவரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மோசடி பேராசிரியர்கள் பணியாற்றத் தடை! துணைவேந்தர் தகவல்
சென்னை, ஆக.1- சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:-
போலி பேராசிரியர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 295 பொறி யியல் கல்லூரிகள் சிக்கி உள்ளன. விளக்கம் கேட்டு 180 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மோசடியில் ஈடுபட்டுள்ள தாக 972 பேராசிரியர்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகத் திரைப்படத் திருவிழா புதுச்சேரியில் இன்று துவங்குகிறது
புதுச்சேரி, ஆக. 1- புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி திரைப்பட இயக்கம் ஆகிய அமைப்பு கள் சார்பில், ‘உலக திரைப்படத் திரு விழா- 2024’ அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடைபெறுகிறது.
இத்திரைப்பட திருவிழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. உலக அளவில் சிறந்த, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழா வெள்ளிக்கிழமை ஆகஸ் 2 மாலை துவங்கி ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி தலைமைச் செயலாளர் சரத் சவுகான், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரன்ஸ் ஜக்கஸ், திரை இயக்குநர் எம். சிவக்குமார் திரைக் கலைஞர் ரோகிணி, தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எடிட்டர் லெனின், எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன், மதுக்கூர் இராம லிங்கம், கவிஞர் சைதை ஜெ, களப் பிரான் தமிழ்மணி, கலியமூர்த்தி, உமா அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
பேரிடர் மீட்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!
சென்னை, ஆக.1- மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆக.1- மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தீபக் ராஜா கொலைவழக்கு 6 பேர் மீது குண்டர் சட்டம்
திருநெல்வேலி, ஆக. 1- நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா. பசுபதிபாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த மே மாதம் 20ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த பாளை காவல்துறையினர் நாங்கு நேரியை சேர்ந்த நவீன்(22), முருகன் என்ற லெப்ட் முருகன் (25), பவித்ரன் (22), காசிராமன் (24), முத்து இசக்கி (23), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டத்தை சேர்ந்த ஐயப்பன் 23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த னர். தற்போது இவர்களில் நவீன், முரு கன் என்ற லெப்ட் முருகன், பவித்ரன், காசிராமன், முத்து இசக்கி மற்றும் ஐயப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தி லும் போலீசார் கைது செய்துள்ளனர்.