tamilnadu

சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது

வேலூர்: ஏப். 13-வேலூர் அடுத்த காட்பாடி வஞ்சூரை சேர்ந்தவர் பாலா, (21). தொழிலாளி. அவர், 16 வயது சிறுமியை கடந்த, 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின்படி விருதம்பட்டு காவல்துறையினர், திருப்பதி சென்று சிறுமியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, கூலித் தொழிலாளி பாலாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

;