tamilnadu

img

தோழர் பெ. சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது

சென்னை, ஜன. 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ. சண்முகத்துக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை, முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை யன்று (ஜன.13) வழங்குகிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்க ளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘டாக்டர் அம் பேத்கர் விருது’ வழங்கி வருகிறது. அந்த  வகையில், 2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதாளர்களுக்கு தமிழ்நாடு முத லமைச்சர் அவர்கள் சனிக்கிழமை (ஜன.13) விருதுகளை வழங்குகிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதி உரையும் வழங்கப்படும். ‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டு களாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார்.

மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதிபெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றியுள்ளனர்.  

வாச்சாத்தி - உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் வழக்கு - தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில், ‘வன மக்கள் வாழ்க்கை வளம் பெற, வளங்களை  பாதுகாப்பதும் மக்களே’ போன்ற செய்தி தொகுப்புகளையும் சண்முகம் எழுதியுள்  ளார். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சுப. வீரபாண்டியனுக்கு தந்தை பெரியார் விருது
சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’-க்கு சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் தலைவருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

சுப.வீரபாண்டியன் பெரியார் கொள்கைகளான சமூகநீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழி பற்று,  பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். இதுவரை 54 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.