நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை!
ராஜகண்ணப்பன் விளக்கம்
சென்னை ஜூன் 27- தமிழ்நாடு சட் டப்பேரவையில் தமது துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவா தங்களுக்கு பதில் அளித்து பேசிய பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், “பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலை யில் உள்ள ஒரு பிரிவினருக்கு இட ஒதுக் கீடு வழங்குவது சம்பந்தமாக நான் தெரி வித்த கருத்து தவறாக புரிந்து கொள் ளப்பட்டுள்ளது. நான் எந்தப் பிரிவு சமு தாய மக்களையும் இழிவாக பேச வில்லை. யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்று நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்தது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த மக் களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆகியோ ரும் இந்தக் கருத்தை தெரிவித்துள்ள னர். எனவே, இது குறித்து முதலமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார்.
பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்!
சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட் டப் பேரவையில் வியாழக்கிழமை நடந்த கேள்வி நேரத் தின் போது தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்தி ரன், தேன்கனிக் கோட்டை நகராட்சி யாக தரம் உயர்த்தப் படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளதாகவும், மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில், பேரூராட்சி களை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்டத்திருத்தம் நாளை மறு நாள் கொண்டு வரப்படும் என்றார்.
நெசவாளர்களுக்கு ரூ.3 கோடியில் தறி - உபகரணங்கள் வழங்கப்படும்!
சென்னை, ஜூன் 27- தமிழ்நாட்டில் மூவாயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 3 கோடி மதிப் பீட்டில் தறிகள் மற் றும் தறி உபகரணங் கள் வழங்கப்படும் என்று சட்டப்பேர வையில் அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியா ழக்கிழமை கைத்தறி மற்றும் துணி நூல் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அவற்றுக்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் காந்தி, “கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கைத்தறித் துறை தொடர்ந்து சிறப்பாக இயங்கிக் கொண்டு வருகிறது என்றும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ‘கோ ஆப் டெக்ஸ்’ நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டுள் ளது என்றும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
ரூ.20 கோடியில் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும். ரூ.1.50 கோடியில் வேலூர் மற்றும் நாகர் கோவில் பகுதிகளில் 2 சாய ஆலைகள் அமைக்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு!
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். ரூ.3 கோடியில் 3,000 கைத்தறி நெசவா ளர்களுக்கு தறிகள் மற்றும் தறி உப கரணங்கள் வழங்கப்படும்.
தேசிய அளவில் கண்காட்சி!
தேசிய மற்றும் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் நடத்தப்படும். ரூ. 2 கோடியில் சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண் காட்சியும், ரூ. 1.20 கோடியில் கோயம்புத் தூர், சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய 4 இடங்களில் மாநில அளவிலான கைத் தறிக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
ஜெய்ப்பூரில் ‘கோ ஆப் டெக்ஸ்’
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும். ரூ. 66 லட்சத்தில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதிய கோ- ஆப்டெக்ஸ் விற் பனை நிலையம் அமைக்கப்படும். நெச வாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் ரூ. 50 லட்சத்தில் விழிப்புணர்வு பய ணத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை, ஜூன் 27- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யிருந்தார். இதற்கு வியாழன்று பதில் கடிதம் எழுதியுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “கொழும்புவில் உள்ள இந்திய தூதரம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடு விக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.