tamilnadu

img

சென்னையில் கஞ்சா கடத்தல் - பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கைது

சென்னை போரூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சூர்யா மற்றும் பிரவீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் குமாருக்கு இதில் பெரும் பங்குள்ளது தெரியவந்துள்ளது. வினோத் குமார் ஒரு தனியார் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார்.

இதுபோன்று கஞ்சா கடத்தும்போது போலீசார் மடக்கினால் பத்திரிகையாளர் எனக்கூறி தப்பிக்கவே, தனியாக பத்திரிகை ஒன்றையும் வினோத்குமார் நடத்தியுள்ளார். ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.