tamilnadu

img

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

சென்னை, ஜூன் 6- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக, எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, மாதவரம், புழல், அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், மந்தைவெளி, மயி லாப்பூர், பட்டினப்பாக்கம், சென்னை திரு வொற்றியூர், எண்ணூர், கொருக்குப் பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திரு வள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரு கிறது.மேலும், சென்னை உள்ளிட்ட 29 மாவட் டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கேட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங் களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.