பெண் நிர்வாகியிடம் மோசடி பாஜக மாவட்டச் செயலாளர் கைது!
சென்னை, ஜூலை 4- சென்னை நேதாஜி நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் நவமணி. இவர் பாஜக பெண் நிர் வாகி என்ற நிலை யில், மாவட்டச் செயலாளர் செந்தில் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னிடம் இரண் டரை லட்சம் தந்தால் ரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவ தாக நவமணியிடம் செந்தில் தெரிவித் துள்ளார். இதனை நம்பிய நவமணி அவ ரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு இரண் டரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட செந் தில், நவமணிக்கு கடை வைக்க அனுமதி பெற்றுக் கொடுக்கவில்லை. இதுபற்றி நவமணி கேட்டதற்கு செந்தில் பணத்தை கொடுக்காமல் அவரை திட்டியும், மிரட்டி யும் அனுப்பியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த நவமணி தூக்க மாத்திரைகளை தின்று தற் கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நவமணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தன்னுடைய தற் கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நவமணி எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், பாஜக மாவட்டச் செயலா ளர் செந்திலைக் கைது செய்தனர்.
விரைவுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை
நடத்துநர்களுக்கு பரிசு
சென்னை, ஜூலை 4- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர். மோகன், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “அரசு விரைவுப் பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கப் பட்டு வருகிறது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூஆர் குறியீடு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் இம்முறையில் அதிகபட்சமாக மின் னணு பணப்பரிவர்த்தனை மூலம் பய ணச்சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்படும்” என்று தெரிவித் துள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தல்:
ஜூலை 7, 8-இல் உதயநிதி பிரச்சாரம்
சென்னை, ஜூலை 4- விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் வேனில் சென்று தீவிர பிரச்சாரம் செய்ய முடிவு செய்து உள் ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வை ஆதரித்து அவர் எந்தெந்த பகுதி களுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 7 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரச்சா ரம் செய்கிறார். 8-ஆம் தேதி நேமூர், ராதா புரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சென்னை - நாகர்கோவில்
வாரத்தில் 4 நாட்களுக்கு ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில்!
சென்னை, ஜூலை 4- ரயில் பயணிகள் வசதிக்கென சென்னை - நாகர் கோவில் இடையே வாரம் நான்கு முறை சேவையாக ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சென்னை - நாகர்கோவில் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய வியா ழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதி யம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) நாகர்கோவிலில் இருந்து குறிப்பி டப்பட்ட அதே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரை யிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படு கிறது.
மறு மார்க்கத்தில் சென்னையிலி ருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மது ரைக்கு காலை 10.37 மணிக்கு வந்து சேரு கிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் களுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
மதுரை, ஜூலை 4- அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக் கள் கொண்டாட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போதே, அரசு மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது. “தனியார் பள்ளிகளை போல ஆண்டு விழாக்களை நடத்துவது சாத்தி யமற்றது” எனவும், “வரும் காலங்களில் பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதியை உயர்த்துவது குறித்து அரசே முடி வெடுக்கலாம்” எனவும் நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.