ஆட்டோ மீது கார் மோதி தம்பி பலியானார்; அண்ணன் காயம்
குழித்துறை, டிச.23- மார்த்தாண்டத்தில் ஆட்டோ மீது கார் மோதி தம்பி பலியானார் அண்ணன் காயம் அடைந்தார்
இனையம் ஹெலன் நகரை சேர்ந்தவர் ஜெரால் டின் மஜாலா (54) ,மீன் வியா பாரம். இவரது தம்பி எழி லன்(46) ,இருவரும் கடந்த 17 ஆம் தேதி ஆட்டோவில் மீனை ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டம் கல்லு தொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப் போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோ க்கி வந்து கொண்டிருந்த கார் மோதியது.
இந்த காரை வள்ளியூர் விசுவாசபுரத்தைச் சேர்ந்த யோஸ்வா (31) அதிவேகமா கவும் அஜாக்கிரதையாக வும் ஓட்டி வந்ததில், ஜெரா ல்டின் மஜாலா ஓட்டி வந்த ஆட்டோ மீது பின்னால் பயங்கரமாக மோதியது .
இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அதில் ஆட்டோ வை ஓட்டிச் சென்ற ஜெரா ல்டின் மஜாலா, அவரது தம்பி எழிலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆசா ரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த் துள்ளனர், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் எழிலன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து யோசுவா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். மேலும் படுகாயம் அடைந்த ஜெரால்டின் மஜா லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள கழிவுகளை கொண்டு வந்த லாரி பறிமுதல்ஓட்டுநர் கைது
நாகர்கோவில். டிச.23- கேரள கழிவுகளை கொ ண்டு வந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார்
அதன் ஓட்டுநரை யும் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்து ஆய்வு செய்தபோது அதில் கழிவு கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில். லாரி ஓட்டுநர் வட சேரி பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பது தெரிய வந்தது. விசாரணையில் சுசீந் திரம் அருகே உள்ள பன்றி பண்ணைக்கு கழிவுகள் கொண்டு வந்ததாக தெரி வித்துள்ளார்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள்
செல் போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
போக்குவரத்து அதிகாரி உத்தரவு
நாகர்கோவில். டிச.23- அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர், மீண்டும் அதனையே செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்துள்ளார்.