tamilnadu

img

பணிநிரவலில் சென்றவர்களை திரும்ப அழைக்க வேண்டும்

சிதம்பரம், மே. 14 - அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி  நிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலை வர் குமாரவேல், பொதுச்செயலாளர் கே. பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் துணைவேந்தர் முரு கேசனை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஊழி யர்கள், 3 வருட ஒப்பந்த அடிப்படையில் தமி ழக அரசின் பணி அமர்த்தப்பட்டனர். இதன்படி  கூட்டுறவு துறையில் பணியமர்த்தப்பட்ட 205  ஊழிர்களின் ஓப்பந்த காலம் கடந்த 11-ந்தேதி யுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை  நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரு வதை கைவிடவேண்டும். அதேநேரத்தில் பணி நீட்டிப்பு ஏற்படுமா னால், பணிநிரவல் சென்ற ஊழியர்களை திரும்ப அழைத்துக் கொண்டு, தற்போதுள்ள ஊழியர்களை கலந்தாய்வு மூலம் சுழற்சி அடிப்படையில் அனுப்பிட வேண்டும். பணி நிரவல் சென்ற ஊழியர்களுக்கு பாகுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கவேண்டும்