கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை
மாவட்டஆட்சியர் முத்தரப்பு பேச்சுவார்த்தை
கள்ளக்குறிச்சி ஏப்.23- கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மற்றும் கறிக்கோழி கம்பெனி நிர்வாகிகள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோழி வளர்ப்பிற்கு கொட்டகைகள் அமைக்க, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் என்றும் முத்த ரப்பு கூட்டத்தில் கறிக் கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்த னர். மேலும் கறிக்கோழி வளர்ப்பும் விவசாயிகள் தமிழ்நாடு அரசின் கோழி வளர்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயி களுக்கு கோழிகளை வழங்க வேண்டும், கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், கறிக்கோழி, வளர்ப்புக்கோழி ரூ 20ஆக உயர்ந்த வேண்டும்,40 நாட்களுக்குள் கோழிகளை பண்ணையிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டும், கோழிப்பண்ணை விவ சாயிகள் மற்றும் தொழி லாளர்களுக்கு நலவாரி யம் அமைத்து தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இதில் கோழிக்குஞ்சு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கூறுகை யில், கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளின் கோரிக்கை களை தங்களின் நிறு வனங்களுக்கு தெரிவிப்ப தாகவும் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறினர். இந்த கூட்டத்தில் கால்நடை துறை இணை மற்றும் துணை இயக்கு நர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் டி.ஏழுமலை, மாவட்ட தலைவர் எஸ்.முருகன், செயலாளர் எம்.சி. ஆறுமுகம், தவிச மாவட்ட செயலாளர் ஏ.வீ.ஸ்டாலின்மணி,தரணி சக்கரை ஆலை சங்க செயலாளர் ஜி.அருள்தாஸ் மற்றும் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.