பி.அரவிந்த் குமார் “
ஆழக்கடல் நீந்தி வந்தேன். ஆனி முத்தை ஏந்தி வந்தேன். ஏந்தி வரும் வேளையிலே நீர்குடித்தேன் பாதியிலே” என்பது ஒரு திரையிசைப்பாடல். முத்துக்குளிப்பதும் மூச்சையடக்குவதும் சாகசம் கலந்த தொழில். 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களின் தலைநகர மாக இருந்தது கொற்கை. கொற்கை நகரம் பண்டைக் காலத்தைச் சேர்ந்தது என்றாலும், அதற்கும் முந்தைய பாரம்பரியமாக திகழ்கிறது முத்துக்குளித்தல். முத்துக்குளித்தல் பணியில் ஈடுபடும் 10 பேர் இன்றும் உயிருடன் இருப்பது ஆச்சரியமானது. இவர்க ளில் ஏழு அல்லது எட்டு பேர் மட்டுமே உயிருடன் இருப்ப தாக முத்தையா என்பவர் கூறுகிறார். அவரது வயது 100. இவர் முத்துக்குளித்தல் பணியில் ஈடுபட்டவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் முத்துக் குளித்தல் பணியை மேற்கொண்டிருக்கிறார். வயது முதிர்வு காரணமாக தற்போது இவரது பார்வைத் திறன் குறைந்துவிட்டது. இருந்தாலும், தனக்காக வும், தன்னுடன் வசிக்கும் கடைசி மகளை பாதுகாப்பதற் காகவும், படகில் சென்று மீன்பிடித்து வருமானம் ஈட்டுகிறார். நாகரீகமான ஆடை, 2 பெரிய மோதிரங்கள், மாட லான காப்பு அணிந்திருக்கும் முத்தையா, எப்பொழுதா வது ஒருமுறைதான் தலையை வாருகிறார். “நான் நல்ல தசைகளை கொண்டவன், தற்போது என் எலும்பு கள் வெளியே தெரிகின்றன” எனக்கூறி தனது சட்டை காலரை நகர்த்தி கழுத்து எலும்புகளை காண்பித்தார். முத்தையா, தூத்துக்குடி மாவட்டம் முத்து நகரைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்களின் கடைசி குழுவைச் சேர்ந்தவர்களில் ஒருவர். முத்து மற்றும் சங்குக்காக மீனவர்கள் முத்துக் குளிப்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்தாலும், கடைசியாக 1956-61-இல் தான் முத்துக் குளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முத்தையாவும் அவரது இளம் நண்பர்களும் இந்தப் பணியில் ஈடுபட் டுள்ளனர். கடலில் மற்றும் கரையில் அவர் செல வழித்த மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கேட்டபோது, “நான் ஷீலா மீனை எளிதாக பிடித்துவிடுவேன். அது ஆறு அடி இருக்கும். முத்து எடுக்க நாங்கள் படகுகளில் தான் செல்வோம். என்னால் நீருக்கடியில் ஐந்து நிமிடங் கள் வரை இருக்க முடியும். ஆனால் நமது நுரையீரலின் பலம் மற்றும் திறனை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு நேரம் மிக முக்கியம். இதனால் நீங்கள் பெருமைப்பட முடியாது. ஏனென்றால், கடலில் இறங்கிவிட்டால் உயிரிழக்கவும் நேரிடும்” என்றார். கடலில் சங்கு எடுக்கும் போது, அவரது இளைய மகன் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். தற்போது முத்துக் குளித்தல் கதைகளை அவரது பேரனுக்கு கூறிக் கொண்டிருக்கிறார். கொரோனா பெருந்தொற்றால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய முத்தையாவின் பேரன், தற்சமயம் அவரது தந்தையுடன் கடல் பணி களுக்குச் செல்கிறார். திரேஸ்புரத்தில் உள்ள சிறிய பகுதிகளில்தான் இந்த வீரமிக்க மனிதர்கள் வாழ்கிறார்கள். முத்து மற்றும் சங்கு மீனவர்கள் சங்கத்தின் குடியிருப்புக்கு பின்புறம் உள்ள இந்தப் பகுதியில், இவர்கள் நீண்ட நாட்களாக வசிக்கின்றனர். இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு அறையும் இருக்கிறது. முத்துக்குளிக்கும் மீனவத்துறைகள் 39. கடந்த 1663 முதல் 1961 வரை கிட்டத்தட்ட 760 மில்லியன் முத்துச் சிப்பிகளை தூத்துக்குடி முத்துக்கரையிலிருந்து அறுவடை செய்துள்ளனர். பின்பு, மற்றொரு வீட்டிற்குச் சென்றோம். அங்கு அடிப்படை வசதிகளுடன் ஒரு சில வீடுகளே இருந்தன. உதவிக்கு யாருமின்றி இருந்தார் அந்தோ ணியம்மா.
இவர், 1950-களில் முத்துக்குளிக்கும் மீனவ ராக இருந்த சண்முகவேலின் மகளாவார். சண்முக வேல் தற்போது காதுகேளாத மாற்றுத்திறனாளி மற்றும் பார்வைத்திறன் குறைந்தவர். அவருடன் உரையாடு வது மிகவும் கடினமாக இருந்தது. “நாங்கள் எட்டு குழந்தைகள்; அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். நான் தனியாக இருந்து, என் பெற்றோரை கவனித்துக் கொள்கிறேன்” என்றார் அந்தோணியம்மா. வாழ்வாதா ரத்திற்காக இவரும், இவரது வயதான தாயாரும் மீன்களை விற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “நான் இயல்பாகவே கடலுக்குள் நீந்தி விட்டு திரும்பி வந்துவிடுவேன். நான் படகுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்றார் சண்முகவேல். அவரிடம் எதுவும் இல்லை; மிக வேதனையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். “கடைசியாக உள்ள முத்துக்குளிக்கும் மீனவர் களுக்கு, மாத உதவித்தொகை வழங்கக் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துக் கொண்டிருக்கிறோம்” என தூத்துக்குடி சங்குகுளி தொழிலாளர்கள் (சங்குகுளித்தல்) சங்கத்தின் தலை வர் எஸ்.பரமசிவன் தெரிவித்தார். இதில் சில தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்படு கின்றனர். நாங்கள் அவர்களை ஆட்சியரிடம் அழைத்துச் செல்ல முயற்சித்தோம். ஒருமுறை, ஆட்சி யர் எங்கள் கோப்புகளை பரிசீலித்தார், ஆனால் தாசில்தார் அதை தடுத்து நிறுத்திவிட்டார் என்றும் பரம சிவன் கூறினார். இதுகுறித்து 90 வயதான தனுஷ்கோடி கூறுகை யில், “சங்கத்தினர் அவர்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். ஆனால், மாத உதவித்தொகை வழங்கி உதவி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு அரசியல்வாதிகளும் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார். கடலுக்குள் முத்துக்குளித்த நாட்கள் குறித்து தனுஷ் கோடியிடம் கேட்ட போது, “கடலுக்கடியில் ஆழத்தில் நீந்துவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல” என்றார். முத்துச் சிப்பிகளை எடுப் பதற்காக கடலுக்கு அடியில் உள்ள பாறைகளுக்கு (பார்ஸ் - paars) இடையே அவர் நீந்தியது மற்றும் அங்கிருந்து வெளியே வந்த நினைவுகளை பகிர்ந்தார், “என் மூதாதையர்கள் அனைவரும் முத்துக்குளிக்கும் பணியை மேற்கொண்டனர். அவர்களை பின்தொடர்ந்து தான் நான் இந்த பணியில் ஈடுபட்டேன். இதுதான் எனக்கு தொழில். அரசாங்கத்திற்காக நான் ஏழு ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்” என்றார்.
முத்துக்குளித்தலில் ஈட்டும் வருமானம் படகு உரிமையாளர்களுக்கும் முத்துக்குளிக்கும் மீனவர் களும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 1990-களில் சங்கு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கை மறுக்கப் பட்டது. அதன்பிறகு, துறைசார்ந்த மீன்பிடிப்பு மற்றும் குத்தகை விடுவது என எதுவும் நடக்கவில்லை. தற் போது சங்குகுளித்தல் உரிமத்துடன் அனுமதிக் கப்படுகிறது என்றார் பரமசிவன். இதில் உள்ள ஆபத்துகள் குறித்து தனுஷ்கோடி யிடம் கேட்ட போது, “முத்து மற்றும் சங்குகள் எடுக்கச் செல்லும் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்” என்றார். மேலும், அவர் ஒரு சிறுபையை எடுத்து, அதிலிருந்த சிப்பிகளை காண்பித்து, முத்தின் நிறம் குறித்து கூறினார். “முத்து மிகவும் விலைமதிப்பற்ற ஒரு ரத்தினம்” என்றார். பின்பு, அவர் விலைமதிப்பற்ற ஒரு ரத்தினத்தை பிரேம் போட்டு வைத்திருந்தார். அவை, அவர் முத்துக்குளிக்கும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படங்கள். அதில் ஒரு படம், கண்ணாடி- ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகர ணங்களுமின்றி நீருக்கடியில் அவர் இருப்பதாகும். கடல் தன்னுள் கொண்டிருக்கும் ரகசிய ஆழம் மற்றும் அறியப்படாத ஆபத்துகளை தைரியமாக எதிர் கொண்டு பணியாற்றிய-பணியாற்றும் முத்துக் குளிக்கும் தொழிலாளர்கள் உண்மையில் நெஞ்சுரம் மிக்க வீரர்களே. தமிழில்: ஆர்.நித்யா நன்றி: தி ஹிந்து நாளிதழ் (3.3.2023)