தமிழ்நாடு முதலமைச்சர் திங்களன்று (ஜூலை 15) ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்து திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வண்டலூர் வட்டம், வில்லிஸ் தொடக்கப் பள்ளி உள்ளிட்ட 611 பள்ளிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, குழந்தைகளுடன் உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட ஊராட்சித் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.