சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவெற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு மையங்களில் புத்தகச் சந்தை நடைபெற்றது. எர்ணாவூரில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமனும், டோல்கேட்டில் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசும் துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, செல்வகுமாரி, கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.