அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மே 16- சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட னர். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு, வியாழக் கிழமை இரவு ஒரு மின்னஞ் சல் வந்தது. அந்த மின்னஞ்ச லில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் ஐஇடி வகையைச் சேர்ந்த அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட் டிருப்பதாகவும், அது வெள்ளியன்று வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டி ருந்தது. தகவல்அறிந்துவந்த காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்ட னர். பல மணி நேரம் நடை பெற்ற சோதனையில், அங்கி ருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப் படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திரு ப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டூ ர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட னர். அண்ணா பல்கலை க்கழகத்துக்கு கடந்த ஒரு ஆண்டில் 17 முறை வெடி குண்டு மிரட்டல் வந்திருப் பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குப்பை கொட்டுவதை கண்காணிக்க கேமரா
சென்னை,மே 16- சென்னை மாநகரம் முழுவதும் திறந்தவெளி யில் குப்பை கொட்டுவது குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், திறந்த வெளியில் குப்பை கொட்டு வதை கண்காணிக்கவும் தடு க்கவும், செயற்கை நுண்ண றிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் பொருத்தப் பட்ட 400 நெருக்கமாக கண்காணிக்கக்கூடிய கேம ராக்களை ரூ.3.63 கோடி செலவில் நிறுவ பெருநகர சென்னை மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது. திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங் கள், 109 செயலாக்க மையங் கள் மற்றும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் யார்டுகளில் செயல்பாட்டு நடவடிக்கை களை கண்காணிக்கவும், முரண்பாடுகளைக் கண்டறி யவும், முக அங்கீகாரம் மூலம் ஊழியர் வருகை யைக் கண்காணிக்கவும், குப்பை கொட்டும் இடங்க ளில் தீ விபத்து போன்ற சம்ப வங்கள் குறித்து எச்சரிக் கைகளை வழங்கவும் இந்த கேமராக்களை மாநகராட்சி வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகளை மாநக ராட்சி கோரியுள்ளது.இந்த கேமராக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி: நீதிபதி கேள்வி
சென்னை, மே 16- தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஜாகிர் உசேனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகன் கழிப் பிடத்தில் விழுந்ததில் காயம் ஏற்பட்ட தாகவும், உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள் ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அப்போது நீதிபதிகள், கைது செய்யப் பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறி ஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள், காவல் நிலை யங்களில் உள்ள கழிவறைகள் குற்றவாளி கள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறை களை ஆய்வாளர்கள் பயன்படுத்து வதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவ தில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவ லர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். மனுதாரரின் மகனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.